ஹரியானா:-
ஃபேஸ்புக்கில் குர்கான் மாம்ஸ் (Gurgaon Moms) என்ற ஃபேஸ்புக் க்ரூப்பில் பெண் ஒருவர் இட்ட பதிவு அதிகளவில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் அந்த பெண் கூறியதாவது:-
எனது மகள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு பள்ளி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போது பீரியட்ஸ் ஏற்பட்டது.
இதை என் மகளை விட ஒரு வயது மூத்த மாணவன் ஒருவன், அவள் ஆடையில் ஏற்பட்டிருந்த இரத்த கறையை கண்டு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டதை அறிந்திருக்கிறான்.
உடனே, அந்த மாணவன் என் மகளின் காதருகே வந்து, உன் ஆடையின் பின்னால் இரத்த கறை ஏற்பட்டிருக்கிறது; நான் என் ஸ்வெட்டரை தருகிறேன் பேருந்தில் இருந்து இறங்கும் போது நீ அதை உன் இடுப்பில் கட்டிக் கொண்டு வீட்டுக்கு பத்திரமாக செல் என்று கூறி இருக்கிறான்.
முதலில் அதை கேட்டு என் மகள் சற்று தயங்கி இருக்கிறாள். அதனால், அதை மனதுக்குள் வைத்துக் கொண்டு பரவாயில்லை என்று அந்த மாணவனிடம் என் மகள் கூறியுள்ளார். அவளில் தயக்கத்தை உணர்ந்த அந்த மாணவனோ பதிலுக்கு, எனக்கு தங்கைகள் இருக்கிறார்கள். இதெல்லாம் நல்லது தான், நீ என் ஸ்வெட்டரை எடுத்து செல் என்று மேலும் கூறி என் மகளை பத்திரமாக பேருந்தில் இருந்து இறக்கிவிட்டிருக்கிறான்.
ஒருவேளை நீங்கள் அந்த மாணவனின் அம்மாவாக இருந்தால், உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மகனை நீங்கள் நல்லபடியாக வளர்த்துள்ளீர்கள் என பாராட்டியுள்ளார்.
மேலும், இந்தகால இளம் தலைமுறையை பற்றி கெட்ட செய்திகளே தற்போது அதிகம் நம் கேட்டு வருகிறோம். ஆனால், அவர்கள் நல்ல காரியங்களும் செய்கிறார்கள் என்பதை தெரியபடுத்த வேண்டும் என்பதற்கே இந்த பதிவு என்று, அந்த தாய் தன் பதிவினை முடித்துக் கொண்டிருக்கிறார்.