தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டெல்லி:
நாடு முழுவதும் கொரோனா தொற்று 2 ஆம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதன் முடிவுகள் செப்டம்பரில் கிடைக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூலம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசி 3- வது கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது என்றும் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 17 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு ஏற்படும் என்று ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.