தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மும்பை:-
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், சிறையில் உள்ள கைதிகள் 11 ஆயிரம் பேரை பரோலில் அனுப்ப மகாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை சிறை அதிகாரிகளுக்கு வழங்கி இருப்பதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
இதன்படி, ஏழு ஆண்டுகளுக்கு குறைவான சிறைத்தண்டனை பெற்றவர்கள் மற்றும் விசாரணைக் கைதிகள் ஆகியோரை 45 நாட்கள் பரோலில் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 60 சிறைச்சாலைகள் உள்ளன அவற்றில் மொத்தம் 36 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் .
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.