இந்தியா

நிர்மலா சீதாராமன் இன்றைய அறிவிப்புகள்- மின்துறை முதல் விண்வெளி வரை அனைத்திலும் தனியாருக்கு அனுமதி. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதாரத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து, இன்று 4வது நாளாக, சுய சார்பு இந்தியா பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார்.

முதல் நாள் அறிவிப்பு:-

நிர்மலா சீதாராமன் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தார்.

இரண்டாவது நாள் அறிவிப்பு:-

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், புலம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், தெருவோர வியாபாரிகளுக்கான பொருளாதார திட்டங்களை அறிவித்தார்.

மூன்றாவது நாள் அறிவிப்பு:- 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 3-ம் நாள் அறிவிப்பில், ரூ.1 லட்சம் கோடியில் வேளாண்மை உள் கட்டமைப்பு நிதி உருவாக்குவது; ரூ.10,000 கோடியில் குறு உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை அமைப்பது; மூலிகைப் பயிர்களை பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.4,000 கோடி; மீனவர்கள் மற்றும் மீன்வளம் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.20,000 கோடி; கால்நடை வளர்ப்புக்கு ரூ.15,000 கோடி; தேனி வளர்ப்பு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.500 கோடி உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார்.

நிர்மலா சீதாராமன் உரை:-

தொடர்ந்து நான்காவது நாளாக இன்று பொருளாதாரச் சலுகைகள் குறித்த அம்சங்கள் வெளியிடப்படுகின்றன. பல்வேறு துறைகளில் கொள்கைச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இன்றைய அறிவிப்பில் துறை வாரியான சீர்திருத்தங்கள் குறித்த அம்சங்கள் இருக்கும்.

courtesy.

கடந்த காலங்களில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஜிஎஸ்டி, திவால் சட்டம், நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதலீடுகளை ஈர்ப்பதற்கும், சந்தையில் போட்டித் தன்மையை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொழில் துறை உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்தத் தொழில்நுட்ப அம்சங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முக்கிய துறைகள்:-

நிலக்கரி, சுரங்கம், ராணுவ உற்பத்தி, விண்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், மின்சார விநியோகம், ஆகாயம், அணு ஆற்றல், விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

நிலக்கரி:-

வருவாய் பங்கீட்டு முறையை அடிப்படையாகக் கொண்ட நிலக்கரி சுரங்க ஏல முறை கொண்டுவரப்படும். இதில் அரசின் தலையீடு நீக்கப்படும். டன் ஒன்றுக்கு இவ்வளவு என்ற கட்டணம் நிர்ணய முறை நீக்கப்படும். யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கேற்று நிலக்கரிச் சுரங்கங்களை வாங்கவும், அதை திறந்தவெளிச் சந்தைகளில் விற்கவும் முடியும். அதற்கு வழிவகை செய்யப்படும்.

ALSO READ  இந்திய மகளிர் ஹாக்கி அணியை பாராட்டி பிரிட்டன் அணி

நிலக்கரித் துறைக்கான உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலக்கரித் துறையில் இந்தியா அதிக வளத்தைக் கொண்டுள்ளது. இருந்தாலும் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் சூழல் இருக்கிறது. நிலக்கரிக்கான தேவை ஏற்பட்டு பற்றாக்குறை நிலவும் போது அதைச் சரிசெய்ய விதிமுறைகள் தேவைப்படுகின்றன. நிலக்கரித் துறையிலிருந்து மீத்தேன் எரிவாயுவும் ஏலத்தில் விடப்படும்.

கனிமச் சுரங்கங்கள்:-

கனிம உற்பத்தி, கனிமச் சுரங்கங்களுக்கான ஏலம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். பொதுவான ஏலத்துக்காக 500 கனிமச் சுரங்கங்கள் அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்படும். 

கனிம உற்பத்தியில் எஞ்சிய கனிமங்களை விற்பனை செய்து நிதி திரட்டவும், ஏல ஒப்பந்தத்தைக் கைமாற்றிக்கொள்ளவும் வழிவகை செய்யப்படும்.

அலுமினிய சுரங்கத் துறையில் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்காக பாக்ஸைட் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்களைச் சேர்த்து ஏலத்தில் விடும் நடைமுறை கொண்டுவரப்படும். இதன் மூலம் மின்சாரம் மிச்சப்படுத்தப்பட்டு, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

ராணுவ உற்பத்தி:-

ராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தும் நிலை மாற்றப்பட்டு சுயசார்பு நிலை உருவாக்கப்படும். 

சில ராணுவ உபகரணங்களுக்கான இறக்குமதி நிறுத்தப்பட்டு அவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் இறக்குமதிக்கான செலவுகள் குறையும். ராணுவ உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு தனியாக பட்ஜெட் போடப்படும்.

ராணுவத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு அளவு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து:-

ஆறு விமான நிலையங்கள் ஏலத்தில் விடப்படும். பொதுமக்கள் – அரசு பங்களிப்பில் இது நடைபெறும். 12 விமான நிலையங்கள் சரவதேச அளவுக்குத் தரம் உயர்த்தப்படும். இதற்கான முதலீடுகளில் இரண்டு கட்டங்களில் ரூ.13,000 கோடி வரையில் முதலீடு கிடைக்கும். இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு ரூ.2,300 நிதியுதவி கிடைக்கும்.

வான்வெளி மேலாண்மையில் விமானப் பயணத்துக்கான நேரமும், எரிபொருள் செலவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விமானப் பயணத்துக்கான வான்வெளித் தடைகள் நீக்கப்படும்.

ALSO READ  ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிற்கு டாடா சொல்கிறது

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் மனதவளமும், திறனும் அதிகமாகவே இருக்கிறது. எனவே சர்வதேச விமானங்களுக்கு இந்தியா மிகப் பெரிய கூடாரமாகத் திகழ முடியும். இத்துறையில் மேலாண்மை, பழுதுபார்த்தல் மற்றும் மாற்றியமைத்தல் மேம்படுத்தப்பட்டு, விமான நிறுவனங்களின் மேலாண்மைச் செலவுகள் குறைக்கப்படும்.

மின்சாரத் துறை:-

மெட்ரோ நகரங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும். எனவே மின் விநியோகத்தில் மக்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் ஏற்படாது. மின்சார விநியோக முறைகேடுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார விநியோகப் பணி கண்காணிக்கப்படும்.

சமூக உள்கட்டமைப்புத் திட்டங்கள்:-

இந்தியாவில் சமூக உள்கட்டமைப்புத் தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்படும். இதற்கான திட்டம் விரைந்து முடிக்கப்படும். இதற்காக ரூ.8,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்காக அரசு தரப்பிலிருந்து தரப்படும் 20 சதவீத நிதியுதவி 30 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

விண்வெளி:-

நம்மிடம் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் நல்ல பெயரைப் பெற்றுள்ளது. தனியார் துறையும் விண்வெளிப் பிரிவில் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன.

எனவே இந்திய விண்வெளித் துறையின் வெற்றிப் பயணத்தில் தனியார் துறையின் பங்களிப்பும் இருக்க வேண்டும். தனியார் துறைக்கு அரசு தரப்பிலிருந்து சிறந்த கொள்கை மற்றும் விதிமுறைச் சூழல் உருவாக்கித் தரப்படும். தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் வசதிகளைப் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வழிவகை செய்யப்படும்.

அணு சக்தி:-

மருத்துவ ஐசோடோப்புகளை உற்பத்தி செய்வதற்காக பொதுமக்கள் – தனியார் பங்களிப்புடன் ஆய்வு உலை அமைக்கப்படும். 

வேளாண் சீர்திருத்தங்களுக்காகவும், விவசாயிகளுக்கு உதவவும், உணவுப் பதப்படுத்துதலில் கதிர்வீச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அணுசக்தி தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் ஸ்டார்ட்-அப் தொழிற்சூழலை இணைக்க தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும். இதன் மூலம் ஆய்வு அமைப்புகளுக்கும், தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கும் இடையே இணைப்பை உருவாக்க முடியும், என்று கூறி இன்றைய அறிவிப்புகளை நிறைவு செய்தார் நிர்மலா சீதாராமன்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியது முழுக்க முழுக்க தற்சார்பு என்று, ஆனால் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் அதிக அளவில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மத்திய அரசு கொடுக்கும் ரூ.200 சிலிண்டர் மானியம்.. நிபந்தனை விதித்தது மத்திய அரசு!

Shanthi

1xbet Зеркало Рабочее на сегодня прямо сейчас 1хбет работающее зеркало сейча

Shobika

20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியது வாட்ஸ்அப்

naveen santhakumar