இந்தியா

இந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மொகாலி:-
இந்திய ஹாக்கி விளையாட்டின் மிகச்சிறந்த வீரரும், மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான பல்பீர் சிங் சீனியர் காலமானார். அவருக்கு வயது 95. அவர் கடந்த 1948, 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற பெருமைக்குரியவர்.

1956 மெல்போர்ன் ஒலிம்பிக்ஸில் இவர் தலைமையில்தான் இந்திய அணி தங்கம் வென்றது.

ஒலிம்பிக்கின் ஆடவர் ஆக்கி இறுதி போட்டியில் தனிநபராக அவர் கோல்கள் அடித்து பதிவு செய்த உலக சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படவில்லை.

ALSO READ  டிசம்பர்-5 பிரதமரின் உருவப்படம் எரிப்பு….டிசம்பர்-8 முழு அடைப்பு….

இந்நிலையில், உடல்நல குறைவால் பஞ்சாபின் மொகாலி நகரில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் கடந்த 8ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார். இதனை அவரது பேரன் கபீர் உறுதி செய்துள்ளார். அவருக்கு வயது 96.  சிங்கிற்கு சுஷ்பீர் என்ற மகளும், கன்வால்பீர், பரன்பீர் மற்றும் குர்பீர் என 3 மகன்களும் உள்ளனர்.

கடந்த 1957ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி அவர் கவுரவிக்கப்பட்டார். 

ALSO READ  டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை தக்க வைத்த இந்தியா !

உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவை முன்னிறுத்தியதில் பல்பீர் சிங்கிற்கு மிகப்பெரிய பங்குண்டு. இவர் “ஹாக்கி மேஸ்ட்ரோ” என்று அன்போடு அழைப்பட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எம்.எல்.ஏ.,க்களுக்கு வாக்குரிமை! – தேர்தல் ஆணையம் அதிரடி!

News Editor

தீவிரவாதிகளுக்கு உதவி சஸ்பெண்டான காஷ்மீர் டி.எஸ்.பிக்கு ஜாமீன்!… 

naveen santhakumar

ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு !

News Editor