டெல்லி:-
ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில் போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஏ.சி இல்லாத இந்த ரயிலுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் என்றும், வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும், இதற்கான அட்டவணை இன்னும் ஒரு சில நாட்களில் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.