கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அடிமலை துறை பகுதியில் Bruno என்ற வளர்ப்பு நாய் ஒன்றை சிறுவர்கள் சிலர் நாட்டுப்படகில் கட்டித் தொங்கவிட்டு கட்டையால் கொடூரமாக அடித்து கொன்ற வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாயைப் பிடித்து சென்று நாட்டுப் படகில் கட்டி தொங்கவிட்டு அடித்துக் கொன்ற அந்த மூன்று சிறுவர்கள் நாயைக் கொன்றது போல துணையும் கொன்று விடுவோம் என நாயின் உரிமையாளரான கிறிஸ்து ராஜாவையும் மிரட்டியுள்ளனர்
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நாயின் உரிமையாளர் கிறிஸ்துராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆதிமலத்துராவைச் சேர்ந்த சுனில், சில்வெஸ்டர் மற்றும் அவர்களது நண்பனையும் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து விழிஞ்சம் ஆய்வாளர் ரமேஷ் கூறுகையில்,
நாயை கொடூரமாக அடித்துக் கொன்ற அந்த மூவரும் 18 வயதிற்கு கீழான சிறுவர்கள், அவர்கள் மீது விலங்கு வன்கொடுமை தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஜூன் 28ம் தேதி அந்த சிறுவர்களை Bruno துரத்தியதால் அவர்கள் மூவரும் அந்த நாயை ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாக அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது
இதனிடையே கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயங்கரன் முயற்சியால் கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்துள்ளது.
தங்களை துரத்தி என்பதற்காக சற்று ஈவு இரக்கம் இல்லாமல் உரிமையாளரை மிரட்டி நாய் ஒன்றை கட்டி தொங்கவிட்டு சிறுவர்கள் மூவர் சேர்ந்து அடித்தே கொன்ற சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது