தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மும்பை :
சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, அடுத்த மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, அனைத்து விமான சேவைகளும் மார்ச்-23 லிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் வைரஸ் பாதிப்புகள் குறைந்ததையடுத்து, மே மாதம் உள்நாட்டு பயணியர் விமான சேவைகள் மட்டும் தொடங்கப்பட்டன.
வெளிநாடுகளில். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த தடை மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,என டி.ஜி.சி.ஏ. எனப்படும், விமான போக்குவரத்து பொது இயக்குனரகம், வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.