தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்தது. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது . பின்னர் காவல் துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற 4 பேரை சுட்டுக் கொன்று விட்டனர்.
இதனால் பிரியங்காவுக்கு நடந்த அநியாயத்திற்கு தக்க தண்டனை வழங்கப் பட்டதாக தெலுங்கானா காவல்துறையை அனைவரும் பாராட்டினர்.நாட்டில் பெண்கள் இரவில் வெளியே செல்ல வேண்டும் என்பது கனவாகவே இருக்கிறது.இந்த கனவை நனவாக்கும் வகையில் கேரள அரசு திருவனந்தபுரத்தில் ‘இரவு நடை’என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர் .நேர கட்டுப்பாடு இன்றி பெண்கள் வெளியே செல்லலாம் என்ற தகவலை’ இரவு நடை திட்டம் தெரிவிக்கும்’ என கேரள அரசு தெரிவித்துள்ளது.