இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் காலகட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக விளையாடாததற்கு சுழற்சி முறையில் பயன்படுத்தப் பட்டதே காரணம் என வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவராக திகழ்பவர் இஷாந்த் சர்மா. இவரின் பந்துவீச்சில் எதிரணியினர் மிரண்டு போகும் அளவிற்கு அசத்தலாக பந்து வீசுவார். அதேசமயம் களத்தில் இவருக்கும் எதிர் அணி வீரர்களுக்கும் இடையேயான மோதல்களுக்கும் பஞ்சம் இருக்காது. தற்போது இந்திய அணியின் சார்பில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் இஷாந்த் சர்மா தோனி, கோலி ஆகியோரின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் தோனி கேப்டனாக இருந்தபோது அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் இருந்ததால் நாங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப் பட்டோம். அதனால் எங்களால் ஒருங்கிணைந்து விளையாட முடியவில்லை. ஆனால் விராட் கோலி கேப்டனாக இருக்கும் இந்தக் காலத்தில் நாங்கள் ஒருங்கிணைந்து விளையாடு வதற்கு ஏதுவாக அணியில் குறைந்த வேகப்பந்து வீச்சாளர்களை உள்ளனர் என தெரிவித்துள்ளார்.