இந்தியாவில் தாக்குதல் நடத்த அதுவும் குறிப்பாக காஷ்மீரில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
நேற்றிரவு காபுல் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு திடீரென தாக்குதல் நடத்தியதில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 90 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இந்நிலையில் அடுத்த கட்டமாக ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், அங்கிருந்த சிறைச்சாலைகளில் இருந்து பல்வேறு பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்களும் விடுவிக்கப்பட்டனர். அதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 100 பேரும் அடங்குவர்.
அந்த 100 பேரும் மீண்டும் தங்கள் தீவிரவாத குழுத் தலைமையகத்தில் இணைந்துள்ளதால் கூடுதல் பலத்துடன் தாக்குதல் நடத்த சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்தியாவில் நடத்தவிருக்கும் அனைத்துத் தாக்குதல்களுக்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு தலிபான்கள் துணையாக இருக்கும் என அந்த அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.