இந்தியா

விபரீதத்தில் முடிந்த உறவு – இளைஞர் மீது ஆசிட் வீச்சு!! பெண் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளாவில், 27 வயது இளைஞர் மீது ஆசைப்பட்டு 37 வயது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Kerala woman throws acid on former lover's face, blinds him in one eye |  The News Minute

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருண்-க்கும், இடுக்கி அடிமாலிப்பகுதியைச் சேர்ந்த ஷீபாவுக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தனக்கு திருமணம் ஆகவில்லை என அந்த பெண் கூறி அருணுடன் நட்பாக பழகியிருக்கிறார். பேஸ்புக்கில் சாட் செய்ததால் இவருக்கும் நெருக்கம் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஷீபாவை நேரில் சந்தித்தபோதுதான் அவருக்கு 37 வயது ஆகிறது என்றும், ஏற்கெனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் அதிர்ச்சி தகவலும் அருணுக்கு தெரியவந்தது. இதனால் இந்த உறவை துண்டித்துக்கொள்ள அருண் முயன்றார்.

ALSO READ  பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணம்?

ஆனால், தன்னை விட 10 வயது குறைந்த அருணை தன்னை திருமணம் செய்யும்படி ஷீபா தொடர்ந்து வற்புறுத்தியும் அருண் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என உறுதியாக மறுத்துள்ளார்.

இதனிடையே அருண்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்கவிருந்தது. இதை அறிந்துகொண்ட ஷீபா, அவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியிருக்கிறார். வேறு வழி தெரியாத அருணும், பணம் கொடுப்பதற்கு இளைஞர் சம்மதித்திருக்கிறார்.

இந்நிலையில், பிரச்னையை பேசி தீர்த்துவிடலாம் என்று அடிமாலிக்கு சென்ற அருண்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷீபா கையில் இருந்த ஆசிட்டை அவருடைய முகத்தில் வீசினார். இதனால் நிலைகுலைந்து விழுந்தார் அருண்குமார்.

ALSO READ  Пин Ап Заносы как Выигрывать Крупные проценты В Онлайн-казино весть, Статьи, Обзор

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆசிட் வீச்சால் அருண்குமாருக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோயுள்ளது. அருண்குமாரிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார், ஷீபாவை கணவர் வீட்டிலிருந்து கைது செய்தனர்.

இதனிடையே அருணின் முகத்தில் பட்டு தெறித்த அசிட் ஷீபாவின் உடலிலும் பட்டிருக்கிறது. ஷீபவின் முகம் மற்றும் உடலில் ஆசிட் பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளது.

ഫെയ്സ്ബുക്ക് പ്രണയം; വിവാഹിതയെന്ന് അറിഞ്ഞപ്പോൾ പിന്മാറി; ഷീബയുടെ ക്രൂര  പ്രതികാരം | Acid Attack | Police | Arrest | Kerala News | News from Kerala  | Manorama News

முறைதவறிய ஆசையால் பெண் ஒருவர் இளைஞர் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தாகத்தால் 5 வயது சிறுமி உயிரிழப்பு…!

Shobika

நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு :

Shobika

இன்று வெளியாகிறது ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் :

Shobika