கரோனா தற்போது மரபியல் மாற்றம் அடைந்து வீரியமிக்க கரோனா வைரஸின் புதிய வகை வேகமாக பிரிட்டன் முழுவதும் பரவி வருகிறது . ஆகையால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறத்து பிரிட்டன் அரசு. உலகையே தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை விட 70 % வேகமாக பரவுகிறது புதிய வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாற்றமடைந்த புதிய வகை வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்கு பிரிட்டன் விமானம் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
புது வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால் மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனை அடுத்து பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை ரத்து செய்ய வேண்டும் மென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பிரிட்டனில் பரவி வரும் புது வகையான கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளது.
அதனையடுத்து பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன, இந்த நிலையில்தான் பிரிட்டனில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டிசம்பர் 22ஆம் தேதி இரவு 12 மணியிலிருந்து விமானங்கள் நிறுத்தப்படும், மேலும் 22 ஆம் தேதி இரவு பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்படும் என மத்திய அமைச்சகம் கூறியிருந்தது.
இந்நிலையில், லண்டனில் இருந்து டெல்லி வந்த 266 பயணிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.