இந்தியா

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு நிச்சயம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்ற புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 13 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் மரணமடைந்தார்.

6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவன் 2013ல் சிறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டான். மற்றொருவன் சிறுவன் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். மற்ற நால்வருக்கும் 2014ல் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வுமனு , கருணை மனுக்களால் தண்டனை நிறைவேற்றுவது தள்ளிப்போனது.

ALSO READ  சாலைகளில் சுற்றித்திரிந்த விலங்குகளுக்கு உணவளித்த பெண் ராணுவ அதிகாரி

இந்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிப்பதற்கான புதிய தேதி அறிவிப்பது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது.

4 பேரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சரிந்த பொருளாதாரத்தை சரிகட்ட ரிசர்வ் வங்கி அதிரடி….

naveen santhakumar

தொடர்ந்து 3வது முறையாக தமிழ்நாடு சிறந்த மாநிலமாக தேர்வு:

naveen santhakumar

நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் அறிவிப்பு

News Editor