டெல்லி:
“இந்தியா டுடே” இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியா டுடே இதழ் ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது வரும் டிசம்பர்-5-ம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தேர்வான மாநிலங்களின் பட்டியல் அந்த இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது.
நீர்மேலாண்மை,சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை “இந்தியா டுடே” இதழ் நிர்வாகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு கடிதமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், இமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தையும், பஞ்சாப் மூன்றாவது இடத்தையும், கேரளா நான்காவது இடத்தையும், குஜராத் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.