கேரளாவில் தம்பதியினர் ஒருவரின் நிர்வாண மகப்பேறு புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது.
வாழ்க்கையில் புகைப்படங்கள் தான் நம் வாழ்ந்ததற்கான வரலாற்று அடையாளங்களாக உள்ளன என்பது மறக்க முடியாத ஒன்று.
இன்றைய காலக்கட்டத்தில் தினமும் வித்தியாசமாக எண்ணற்ற போட்டோஷூட்கள் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் இணையத்தில் அத்தகைய போட்டோஷூட்களின் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம்.அப்படியான ஒரு சம்பவம் கேரளாவில் வைரலாகி வருகிறது.
நிர்வாணமாக கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் மகப்பேறு போட்டோஷூட் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயத்தை சேர்ந்த புகைப்பட கலைஞரான ஆதிரா ஜாய் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார், அவரது கணவரின் நண்பரான அமிர்தபாத்- ஜான் தம்பதியினர் விடுமுறைக்கு வந்த இடத்தில் இப்போட்டோக்களில் இடம் பெற்றுள்ளார்கள்.
இதுகுறித்து ஆதிரா ஜாய் ‘தாய்மை என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது’ என்ற வாசகங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தம்பதியினர் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறையில் இப்படியான போட்டோக்களை எடுக்க விரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.