காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மற்றும் மூத்த தலைவர்கள் ராகுல், பிரியங்கா ஆகியோருடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு நேற்று நடந்தது.
அப்போது பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியை மீட்டு கொண்டு வர முக்கிய செயல் திட்ட அறிக்கையை சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் தனியாக பாராளுமன்ற குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை பிரஷாந்த் கிஷோர் முன் வைத்துள்ளதாகவும் தெரிகிறது.
அதன் பின்னர் முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகராம் ராஜன், தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் உள்பட 9 பேர் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என்றும் பெரு நிறுவனங்களின் நிதியை பெறவும், கட்சியின் திட்டங்களை முடிவு செய்யவும் இந்த குழுவை அமைக்க வேண்டும் என்று பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
இதன் மூலம் காங்கிரஸை மீட்டு எடுக்க முடியும் என்றும் கட்சியை புதிய திசைக்கு கொண்டு செல்ல இயலும் என்று பிரசாந்த் கிசோர் ஆலோசனை தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.