புனே:-
வறுமையின் காரணமாக மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் பாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் சிலம்பம் சுற்றி பணம் கேட்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. நடிகர்கள் சிலரும் காய்கறி மற்றும் மீன் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் செய்திகள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்து வருகிறது.
இந்நிலையில் வறுமை காரணமாக 85 வயதான மூதாட்டி ஒருவர் புனே அருகே சாலையோரத்தில் சிலம்பம் சுற்றி வித்தை காட்டி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதனைக் கண்ட பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர் அந்த பாட்டியை போராளி (Warrior Aaji Ma) என்று குறிப்பிட்டு அவர் குறித்த தகவல் கேட்டிருந்தார்.
அதனையடுத்து தற்போது அவர் மற்றொரு ட்வீட்டில் அந்த பாட்டியை தொடர்புகொண்டதாக குறிப்பிட்டார். அவரது பெயர் சாந்தாபாய் பவார். இவர் புனே அருகே ஹேட்ப்சர் (Hadpsar) பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
ரிதேஷ் தேஷ்முக் இந்த பாட்டிக்கு உதவும்போது மக்களின் ஆபத்பாந்தவன் சோனு சூட் சும்மா இருப்பாரா!!! உடனே இந்த பாட்டியை கொண்டு பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து ரிதேஷ் மற்றும் சோனு சூட் இருவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.