டெல்லி:-
கொரோனா ஊரடங்கு காலத்தில் குற்றவாளிகளை கைது செய்யபோலீசாருக்கு கட்டுப்பாடு விதித்ததற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதேபோல், முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வதற்கும் கட்டுப்பாடு விதித்த ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல், ஊரடங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூலை 17 வரை கட்டுப்பாடுகள் விதித்து ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றமே மறு ஆய்வு மனுதாக்கல் செய்தது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஷ்வரராவ், அனிருத்த போஸ் அமர்வு தடை விதித்தது.
இது காவல் துறையின் விசாரணை அதிகாரங்களுக்கு தனி நீதிபதியின் உத்தரவு கட்டுப்பாடு விதிப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க கூடிய வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதேபோல், 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் முன்ஜாமின் கோரும் மனுக்களை ஏற்க வேண்டும் என்றும், முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வதற்கு விதித்த கட்டுப்பாடு தனிநபருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறுவதாகும் என்றும் கூறியுள்ளது.