பாலிவுட்டின் ‘பேபி டால்’ (Baby Doll) என்று அழைக்கப்படும் பாடகி கனிகா கபூர் கடந்த மார்ச் 15ம் தேதி லண்டனுக்கு சென்று திரும்பினார்
. இந்நிலையில் கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது லக்னோவில் உள்ள KGMU மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
லக்னோ விமான நிலையம் வந்திறங்கியதும் அதிகாரிகளின் கொரோனா சோதனையில் இருந்து எப்படி கனிகா தப்பினர் என்பது கேள்விக்குறியாக உள்ளது?
அதோடு தான் லண்டன் சென்று வந்ததை மறைத்து நண்பர்களுக்கு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் பெரிய பார்ட்டி கொடுத்துள்ளார் கனிகா கபூர். அந்த பார்ட்டியில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். சுமார் 100 பிரபலங்கள் வரை அந்த பார்ட்டிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தவிர மேலும் இரண்டு போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார் இதன் மூலமாக 300 முதல் 400 பேர் வரை அவர் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பார்ட்டியில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான வசுந்தரராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்தும் கலந்து கொண்டதாகவும் கனிகா கபூர் கூறியுள்ளார். துஷ்யந்த் தற்போது லோக் சபா எம்பி ஆக உள்ளார்.
அதோடு துஷ்யந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஐ சமீபத்தில் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் கனிகா அபார்ட்மென்ட் ஒன்றில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அவர் இதை மறைத்ததால் அந்த அபார்ட்மென்டில் வசித்து வரும் பலருக்கும் கொரோனா பரவி இருக்குமா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதனால் அந்த கட்டிடம் முழுவதையும் தனிமை படுத்தவுள்ளனர் என கூறப்படுகிறது