பெங்களூரு:
மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு திமுக எம்எல்ஏ மற்றும் திமுக இளைஞரணி செயலாளரான, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடசிந்த மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கன்னட திரை உலகம் மட்டுமின்றி இந்திய திரை உலகமே இரங்கல் தெரிவித்தது. ஏராளமான தெலுங்கு, தமிழ் திரைப்பட நடிகர்கள் நேரில் வந்து புனித் ராஜ்குமாரின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், பிரபு உள்ளிட்ட பலர் வந்து புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் நேற்று புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதைத்தொடர்ந்தது கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.