சென்னை
தமிழகம் மற்றும் இந்திய அளவில் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
விருதுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், காசி ஆனந்தன், ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர்களுக்கு இதுவரை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2021-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் பட்டியலை விசிக வெளியிட்டுள்ளது. அதில் அம்பேத்கர் சுடர் – மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர். பெரியார் ஒளி- வைகோ, மதிமுக பொதுச்செயலாளர். காமராசர் கதிர் – நெல்லை கண்ணன். அயோத்திதாசர் ஆதவன்- பி.வி.கரியமால், குடியரசு கட்சி தலைவர். காயிதேமில்லத் பிறை- அல்ஹாஜ் மு.பஷீ்ர் அகமது. செம்மொழி ஞாயிறு – செம்மொழி க.இராமசாமி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விருதுகள் வழங்கும் விழா வரும் டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மிகவும் எளியமுறையில் கொண்டாடப்படும் என விசிக வெளியிட்டுளா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. .