பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்தியா பிரிட்டிஷுரிடம் இருந்து சுதந்திரத்தை 99 வருட குத்தகை என்ற அடிப்படையில்தான் பெற்றது என்று கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது
அரசியல்வாதிகளும் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரபலங்களும் உளறிக் கொட்டுவது அடிக்கடி நடைபெறும் சாதரணாமான நிகழ்வு.
சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் சுதந்திர தினம் குடியரசு தினம் பூனை மேல் மதில் என மிக முக்கியமான பதவியில் உள்ளவர்களை பலமுறை உளறிக் கொட்டியுள்ளனர்
பெரும்பாலானோர் தாங்கள் உளருகிறோம் என்பதை கொஞ்ச நேரத்திலேயே உணர்ந்து கொள்வார்கள். ஆனால் சிலரோ தங்கள் உளர்கிறோம் என்பதை மற்றவர்கள் கூறினாலும் சற்றும் புரிந்து கொள்ளாமல் தங்கள் கருத்தை ஆணித்தரமாக பொய்யாகப் பேசி தள்ளுவார்கள்
உளறுவது மற்றும் பொய் சொல்வதில் எந்த கட்சிக்கும் வேறுபாடு கிடையாது
ஆனாலும் பாஜகவை சேர்ந்தவர்கள் உளறுவது நமக்கு கோபத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக பெரும்பாலும் சிரிப்பை வரவழைக்கும்
அப்படியாக உத்திரபிரதேச தேர்தலை முன்னிட்டு ஜான்சி நகரில் The Lallantopல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவை சேர்ந்த பேச்சாளரான ருச்சி பதக் பங்கு பெற்று பேசினார்
ஆரம்பம் முதலே அனல் பொங்க பேசிய ருச்சி பதக்; இந்தியா ஒன்றும் முழுதாக சுதந்திரம் பெறவில்லை. பிரிட்டிஷார் இந்தியாவிற்கு சுதந்திரத்தை 99 வருட குத்தகைக்கு தான் அளித்துள்ளார்கள் என்று கொஞ்சம் கூட அசராமல் ஆணித்தரமாகக் கூறினார்
இது அங்கிருந்தவர்களுக்கு மட்டுமல்ல இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது
அதுமட்டுமல்ல நாட்டில் இன்று நடைபெறும் எல்லாவற்றிற்கும் காரணமான நேரு தான் இந்த ஒப்பந்தத்தையும் அன்றே போட்டுள்ளார் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்
அதுமட்டுமல்ல சமீபத்தில்தான் இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடியது
இதனடிப்படையில் பார்த்தால் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் இன்னும் 24 வருடங்களில் முடிவடைந்துவிடும்
எனவே பிரிட்டிஷ் மீண்டும் இந்தியாவை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வரும் என்று நெட்டிசன்கள் கடுமையாக கிண்டலடித்து வருகிறார்கள்