புதுடெல்லி:-
இன்று நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் பணியின் போது உயிர்த்தியாகம் செய்த போலீசாருக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
1959ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி காஷ்மீர் அருகே லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர். இதனை கவுரவிக்கும் விதமாக பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2018ம் ஆண்டு காவல்துறை நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு டெல்லியில் இந்தியாவின் முதலாவது தேசிய காவல் துறை அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில், டெல்லியின் சாணக்கியாபுரி பகுதியில், தேசிய காவலர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு சின்னத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.