டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் கட்டி வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
டெல்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே அதற்கு மாற்றாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக நாடாளுமன்றமும் கட்டப்பட்டு வருகிறது. டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி வரும் நிலையில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதையடுத்து நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.