கான்பூரில் தனது மகளை தனது மகனே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீசாரிடம் தாய் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை என்பது தற்போது ஒரு சாதாரண செய்தியாகி விட்டது. முதலில் தெரியாத நபர்கள் இந்த வன்கொடுமையை செய்தனர். பிறகு தெரிந்த நண்பரோ, நம்பியவர்களோ வன்கொடுமை செய்ய துணிந்தனர்.
ஆனால் தற்போது குடும்பத்திற்குள்ளே பாலியல் தொந்தரவு நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், கான்பூரில் உள்ள பாபுபூர்வா பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். அந்த பெண் டிஐஜியை சந்தித்து தனது மகனை பற்றி கண்ணீர் மல்கக் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் போலீசாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் கடைசி மகள் மீது தனது 3 வது மகனுக்கு தவறான ஆசை உள்ளதாகவும் ,அவளிடம் எப்பப் பார்த்தாலும் தனது மகன் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் தாய் டிஐஜியிடம் தெரிவித்துள்ளார். பலமுறை மகள் இருக்கும் அறைக்குள் புகுந்து அவளை பலாத்காரம் செய்ய தனது மகன் முயன்றுள்ளதாக தாய் புகார் அளித்துள்ளார்.
இதனை கேட்ட போலீசாருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது, அதாவது புகார் கொடுத்த பெண் திருமணத்திற்குப் பின்னர் அவளின் மாமனாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.