இந்தியா

பொண்ணு ஓகே…ஆனால் சேலை நல்லா இல்ல…இப்படியும் ஒரு மாப்பிள்ளை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்நாடகாவில் மணப்பெண் அணிந்திருந்த சேலை பிடிக்கவில்லை என கூறி மாப்பிள்ளை ஓடிப்போன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருமணங்கள் பல சமயங்களில் பல்வேறு காரணங்களால் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நிறத்தில் தொடங்கி வரதட்சணை வரை விதவிதமான காரணங்களால் நிற்கும் திருமணங்களால் பரிதாபங்கள் ஏற்படும்.

ஆனால் கர்நாடகாவில் மணப்பெண் அணிந்திருந்த சேலை பிடிக்கவில்லை என கூறி மாப்பிள்ளை மண்டபத்திலிருந்து ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ALSO READ  'என்ஜாய் எஞ்சாமி' பாடல் குறித்து ட்வீட் செய்த செல்வராகவன் !

ஹாசன் கிராமத்தை சேர்ந்த ரகுகுமார்-சங்கீதா ஜோடிக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் அணிந்திருந்த சேலை தரமானதாக இல்லை எனவும், அதனை மாற்ற வேண்டும் என ரகுகுமார் வீட்டார் கட்டாயப்படுத்தினர். ஆனால் பெண் வீட்டார் மறுக்கவே கல்யாண மண்டபத்திலிருந்து ரகுகுமார் ஓடி விட்டார்.

இத்தனைக்கும் ரகுகுமாரும்-சங்கீதாவும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா;கௌசிக் பாசு கருத்து!

News Editor

இன்று முதல் விவசாயிகளுக்கான கிஸான் ரயில் துவக்கம்… 

naveen santhakumar

தீபாவளிக்குள் ஜியோ 5ஜி சேவையா?

Shanthi