குழந்தை பிறந்தவுடன் பலருக்கு கர்பப்பை வீக்கம் இருக்கும்.ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் நல்ல வெயிலில் காய வைத்து பொடியாக்கி வேண்டும்.
பின்னர் அந்த பொடியை காலை வேளையில் பாலில் கலந்து அதோடு சிறிது பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் சரியாகும்.
பெண்களின் இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்தங்களி ஒரு நல்ல தீர்வு. சுத்தமான உளுந்தை வறுத்து அதை நைசாக அரைக்க வேண்டும்.
அதில் பனங்கற்கண்டு , நல்லெண்ணெய் சேர்த்து களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவாகும்.
மாதவிலக்கு நாட்களில் பல்வேறு பெண்களுக்கு வலி அதிகமாக இருக்கும். அதை சரி செய்வதற்காக ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் வாரம் மூன்று முறை எடுத்துக் கொண்டால் மாதவிலக்கின் போது ஏற்படும் வலி குறைவாக இருக்கும்.
கடுக்காய் தான்றிக்காய் நெல்லிக்காய் இவற்றை தனித்தனியாக பொடி செய்து குறிப்பிட்ட அளவில் சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப் பை தொந்தரவை தவிர்க்கலாம்.