எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டவை வாழைப்பழங்கள்.
இந்த வாழைப்பழங்களில் உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
நம்மில் பலரும் குறைந்த அளவிலேயே உட்கொள்ளும் வாழைப்பழ வகைகளுள் ஒன்று செவ்வாழைபழம். இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழையின் தாயகம்.
கரீபியன் நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா என்றுக் கூறப்படுகிறது.
இது உள்ள முக்கிய பொருட்கள் பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும்.
இதிலுள்ள உயர்தர பொட்டாசியம் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
இதில் வைட்டமின் C நிறைந்து உள்ளது.
செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் காணப்படுகிறது.
மேலும் இதில் 50 சதவிகிதம் அளவுக்கு நார்ச்சத்து காணப்படுகிறது.
நரம்பு தளர்ச்சியை குணமடைய செய்யும்
நரம்பு தளர்ச்சியால் உடலில் பலம் குறையும். இதனால் ஆண்மை குறைபாடு ஏற்படும்.
எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெற்று ஆண்மை தன்மை சீரடையும்.
குழந்தை பேறு பெற வழி செய்யும்.
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையும் அல்லது பரிகாரதிற்கு ஜோசியரையும் நாடுவார்கள்.
இது போன்ற குழந்தை இல்லாத தம்பதிகள் தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழமும் அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கண்பார்வைக்கு நல்ல மருந்து.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறந்த மருந்து செவ்வாழை.
கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
அதே போல மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பிறகு செவ்வாழை பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
தொற்றுநோயை தடுக்கும் ஆற்றல்.
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் செவ்வாழைக்கு உள்ளது.
வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் எதிர்ப்பு அதிகரித்து தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்படும்.
பல்வலிக்கு மருந்தாக பயன்படும்.
பல்வலி, பல் ஆடுதல் போன்ற பல்வியாதிகளையும் குணமாக்கும்.
பல் தொடர்புடைய நோய்களுக்கு நாம் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி சிறங்கு நீக்கும்.
சொரி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த சர்மரோக நிவாரணி.
மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.