முருங்கை பூவையும் முருங்கை கீரையையும் நிழலில் உலர்த்தி பொடி செய்து பல வகையில் பயன்படுத்தலாம்.வெயில் படாமல் நினைவில் உணர்த்தினால் மட்டுமே தான் அதனுடைய தன்மை மாறாமல் இருக்கும்.
#உலர்த்தி பொடி செய்த முருங்கை இலை பொடி இன்றைய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ளது.முருங்கை இலை தூளை சைவ அசைவ எந்த குழம்பிலும் கலந்து சமைத்தால் அதில் தனிச்சுவை சற்று தூக்கலாக இருக்கும்.
#நிழலில் உலர்த்திய முருங்கைப் பூ பொடியை காலையில் கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகரிக்கும்.கண் நோய் உள்ளவர்கள் தேன் கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும்.கண்களில் உருவாகும் வெண்படலமும் மாறும்.
#ஞாபகமறதி நோய் சிறந்த மருந்தாக முருங்கைப்பூ சித்த வைத்தியத்தில் கருதப்படுகிறது, முருங்கைப்பூவை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
#மேலும் முருங்கைப்பூவை எந்த வகையில் சாப்பிட்டு வந்தாலும் கசாயம் வைத்து அருந்தி வந்தாலும் உடம்பிலிருக்கும் அசதி நீங்கும் பித்தம் குறையும் மேலும் தாம்பத்திய உறவில் நாட்டம் உண்டாகும் நீர்த்துப்போன விந்து கெட்டியாகும்.
#உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் தாக்கத்தால் மணம் சுவை இழந்து போனவர்கள் அதிகம்.இதுபோன்று முருங்கை பூவை தினமும் பயன்படுத்தி வந்தால் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது முருங்கைப்பூ.