அரசியல்

தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய நிதீஷ்குமார் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாட்னா: 

பீகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி MLA-க்களுடனான ஆலோசனையில் நிதீஷ் குமாரை முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நிதீஷ் குமார் இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி MLA-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ALSO READ  ஒருவழியாக அரசியலில் குதித்த விஜய் - உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி!

கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.ஆலோசனையின் இறுதியில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த நிதீஷ் குமாரையே மீண்டும் முதல்வராக தேர்வு செய்வது என்று அவர்களால் முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வராக நிதீஷ் குமார் நாளை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே தொடர்ந்து மூன்று முறை முதல்வராக பதவி வகித்த நிலையில், தற்போது நான்காவது முறையாக நிதீஷ்குமார் முதல்வராக பொறுப்பேற்க உள்ளது அக்கட்சி ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திமுக சொன்ன நீட் ரகசிய திட்டம் என்னவானது?- சீமான்

naveen santhakumar

இளவரசர் இளவரசி பட்டங்களை அதிகாரபூர்வமாக துறந்த ஹாரி மேகன் தம்பதி – பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

Admin

என் வீடாக இருந்த கட்டிடத்தை, எளிய மக்களுக்கான தற்காலிக மருத்துவமனையாக மாற்ற நினைக்கிறேன் – கமல்ஹாசன்

naveen santhakumar