சேலத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக தாக்கி பேசினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சேலத்தில் நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு பல்வேறு சாதனைகள் படைத்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கலில் ஏதேனும் குறைகள் இருந்தால் திமுக தலைவர் ஸ்டாலின் கூறட்டும். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார் என விமர்சித்தார். என்னை விசித்திர விவசாயி என்று பாராட்டிய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.