தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. அந்தவகையில் திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி இடையே முதல் மற்றும் 2ஆம் கட்ட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. திமுக பேச்சுவார்த்தைக் குழுவினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது.
இன்று அல்லது நாளை மீண்டும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும். திமுகவுடன் நீண்ட கால உறவு உள்ளதால் உரிமையும் அதிகமாக உள்ளது. அதனால் தான் பேச்சு வார்த்தையில் தாமதம் ஆகிறது என்றார். அதனை தொடர்ந்து பேசிய அவர் கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தியதாக தெரிவித்தார்.