தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6 ஆம் தேதி கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோரும், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரும், விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் வசந்த் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர். ராகுல் காந்தியின் தமிழக வருகை மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. என் அப்பாவின் கனவை நிறைவேற்றுவது என் கடமை என்றார். இடைத்தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.