நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 100. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் நடிகர் அதர்வாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் சரவணன் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மரகதநாணயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். இப்படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து இவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் அதர்வாவுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர்,கே சரவணன். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை சத்யா ஜோதி நிருவனம் தயாரிக்கவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.