இம்பால்:-
மணிப்பூரில் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த 7 எம்.எல்.ஏக்கள், சட்டப்பேரவைக்கு செல்ல மணிப்பூர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சனாசம் பிரா சிங் (Sanasam Bira Singh), கின்சவ்ன்ஹௌ (Ginsuanhau), ஒய்நம் லூகோய் சிங் (Oinam Lukhoi Singh), கம்தங் ஹவோகிப் (Ngamthang Haokip), யனங்கோம் சர்சந்திர சிங் (Yengkhom Surchandra Singh), க்ஷேத்ரிமயுன் பிரா சிங் (Kshetrimayum Bira Singh) மற்றும் பவ்நம் ப்ரோஜன் சிங் (Paonam Brojen Singh) உள்ளிட்ட ஏழு எம்எல்ஏக்கள் மணிப்பூர் சட்டப்பேரவை வர சபாநாயகர் யம்நம் கெம்சந்த் (Yumnam Khemchand) தடை விதித்து உத்தரவிட்டார் இந்த வழக்கு நீதிமன்றம் சென்ற நிலையில் மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி K.நோபின் சிங் சபாநாயகர் விதித்த தடை உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் கூறுகையில்:-
நீதிமன்றம் தனது கடமையை செய்துள்ளதாகவும், மேலும் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க தடை விதித்திருப்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவித்தார்.