திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்: பள்ளி மாணவர்கள் படியில் தொங்குவதை தவிர்க்கும் விதமாக வழிதடங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு என்று தனியாக பேருந்துகள் இயக்குவது குறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்பட்டுத்த பாட புத்தகங்ககில் 2 அல்லது மூன்று பக்கங்கள் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளதால் அதனை கொண்டு வருவோம் எனவும் தவறான நோக்கதோடு மாணவிகள் மீது தொடுதல் நல்ல நோக்கத்திற்காக தொடுவது குறித்த விழிப்புணர்வு கிராம பகுதி மாணவர்களிடையே இல்லை என்பதால் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.