திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது 84 ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்கள் தயாராக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த மாத இறுதிக்குள் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மையங்கள் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடைபெறும் என்றும், 50 சதவிகித பாட புத்தகம் குறைக்கப்பட்டுள்ளதால் இதற்கு மேல் குறைக்க முடியாது என்றும் உறுதியாக தெரிவித்தார்.
மேலும் மாணவர்களுக்கு என்று தனியாக பேருந்துகள் இயக்குவது குறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என்றும், பெண் பிள்ளைகள் மீதான பாலியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பாட புத்தகங்களில் 2 அல்லது மூன்று பக்கங்களுக்கு விழிப்புணர்வு பாடங்களை கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.