தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் தோனி தான் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி விளையாடவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் களமிறங்குவதை பார்க்க அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பான ‘தி சூப்பர் கிங்ஸ்’ நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் ரெய்னா, தன்னை பொறுத்தவரை இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனி தான் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஐபிஎல் சீசனில் சென்னையில் தாங்கள் விளையாடும் போது மைதானம் நிரம்பியிருக்கும் என்றார்.
இந்தாண்டு எங்கள் அணியில் இளைஞர்கள், மூத்த வீரர்கள் அடங்கிய சூப்பர் அணியை பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.