விளையாட்டு

தோனியின் ஆசம் கிளிக் : வைரல் புகைப்படம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேசிய பூங்காவில் தோனி தான் எடுத்த புலியின் புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை தொடருக்கு பின் கிரிக்கெட்டில் இருந்து விலகி, தோனி தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். தோனி மீண்டும் இந்தியா அணி ஆடும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பாரா? என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ஆனால் 2020 ஐபிஎல் தொடரில் மட்டுமே தோனி பங்கேற்க இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே தோனி வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


தோனி ஓய்வு நேரத்தை தன் குடும்பத்தினருடன் செலவிடும், அந்த தருணங்களை புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ALSO READ  தாலி கட்டியவுடன் அழுத மாப்பிள்ளை … என்ன காரணம் தெரியுமா…

இந்த நிலையில் தோனி, அவரது மனைவி சாக்ஷி மற்றும் நண்பர்கள் கன்ஹா தேசிய பூங்காவுக்கு சென்றனர். இதுவே முதன்முறை என்று தெரிவித்து ,அங்கு தோனி ஒரு புலியை புகைப்படம் எடுத்துள்ளார்.

அதனை தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தோனி ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் இணைதளத்தில் வேகமாக பகிர்ந்து, ஒரு புலியே, ஒரு புலியை புகைப்படம் எடுத்துள்ளது என கொண்டாடியும் வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

6வது முறையாக சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற மெஸ்ஸி

Admin

இந்திய நிகழ்த்திய வரலாற்று சாதனை; 32 ஆண்டுகளுக்கு பிறகு பிரிஸ்பேனில் மண்ணை கவ்வியது ஆஸ்திரேலிய..!

News Editor

ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள்….

naveen santhakumar