தேசிய பூங்காவில் தோனி தான் எடுத்த புலியின் புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
உலகக்கோப்பை தொடருக்கு பின் கிரிக்கெட்டில் இருந்து விலகி, தோனி தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். தோனி மீண்டும் இந்தியா அணி ஆடும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பாரா? என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ஆனால் 2020 ஐபிஎல் தொடரில் மட்டுமே தோனி பங்கேற்க இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே தோனி வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தோனி ஓய்வு நேரத்தை தன் குடும்பத்தினருடன் செலவிடும், அந்த தருணங்களை புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தோனி, அவரது மனைவி சாக்ஷி மற்றும் நண்பர்கள் கன்ஹா தேசிய பூங்காவுக்கு சென்றனர். இதுவே முதன்முறை என்று தெரிவித்து ,அங்கு தோனி ஒரு புலியை புகைப்படம் எடுத்துள்ளார்.
அதனை தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தோனி ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் இணைதளத்தில் வேகமாக பகிர்ந்து, ஒரு புலியே, ஒரு புலியை புகைப்படம் எடுத்துள்ளது என கொண்டாடியும் வருகின்றனர்.