தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டெல்லி:
ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீரா பாய் சானு நாடு திரும்பினார். இந்தியா திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ எடை பிரிவினருக்கான பளு தூக்கும் போட்டியில் மீரா பாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கர்ணம் மல்லேஸ்வரிக்கு பின் பளு தூக்குதலில் பதக்கம் வென்றவர் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ள மீரா பாய் சானுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனிடையே மீரா பாய் சானுக்கு அனேகமாக தங்க பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.