ஒருவர் தான் வளர்க்கும் நாய்க்கு ஹெல்மெட் அணிவித்து பைக்கில் கூட்டி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்காக கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மட்டுமில்லாமல் பின்னாடி அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை பலரும் பின்பற்றாத நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் தான் வளர்க்கும் நாய்க்கு தலைக் கவசம் அணிவித்து பைக்கில் கூட்டிச் சென்றுள்ளார்.
நண்பர்கள் இருவர் பைக்கில் அமர்ந்து சென்றால், எப்படி ஓட்டுபவர் தோள் மீது கைபோட்டுக் கொண்டு செல்வோமோ, அதே போல் இந்த நாய் அவரின் தோளில் கை போட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்து செல்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.