சென்னை:-
புதிய மின்சார திட்டம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தப் புதிய மின்சார திட்டமானது மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது. இது ஏற்கனவே உள்ள மின்சார சட்டத்தின் வரம்புகளையும் திட்டம் உள்ளது. மேலும் இது பொதுமக்களுக்கும், மாநில அரசின் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது.
இந்த முறையில் நேரடியாக மானியம் செலுத்துவதிலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான வரைவுச் சட்டம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. 21 நாட்களுக்குள் இது தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு கூறியிருந்தது.
மின்துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கவே இந்தத் திருத்தங்களைக் கொண்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தச் சட்டத்தில் சொல்லப்படும் பல திருத்தங்கள் சர்ச்சைக்குரியவை என்கிறார்கள் மின்சாரதுறையை சேர்ந்தவர்கள்.