கல்கி ரங்கநாதன் மாற்றுத்திறனாளி பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு சூடு. பள்ளி மீது மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
சென்னை பெரம்பூரில் கல்கி ரங்கநாதன் மாற்றுத்திறனாளி பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவியை, மாணவியின் தாத்தா வீட்டிற்கு அழைக்க சென்றுள்ளார். அப்போது மாணவியின் கால்களில் சூடு வைத்தாற்போல காயங்கள் இருந்ததை பார்த்து மாணவியின் தாத்தா அதிர்ச்சி அடைந்தார். இதனை மாணவியின் தாயாரிடம் சொன்னார்.
இதனை பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது தெளிவான பதில் ஏதும் வரவில்லை. அலட்சிய போக்கில் பள்ளி நிர்வாகத்தினர் மாணவியின் தாயாரிடம் நடந்து கொண்டனர். உடனே மாணவியின் தாயார் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பள்ளியின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.