கேரளாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராமல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திகழ்கிறது.
கேரளாவில், அண்மைகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கிருந்து அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் முதன் முதலாக கொரோனா தொற்று கேரளாவில்தான் கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில்தான் அதிக கொரொனா பாதிப்பு காணப்படுகிறது. சராசரியாக 30 ஆயிரம் பேர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர சில அறிவுறுத்தல்களை வழங்கிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கேரளாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாததால் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வராமல் உள்ளது. எனவே, அதில் கவனம் செலுத்தி கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அங்கு மீண்டும் 2 வாரங்கள் ஊரடங்கை அமுல்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.