சென்னை:-
சென்னையில் பிரபல ரவுடிகளில் ஒருவன் சிடி மணி, தென் சென்னையின் தாதாவாக வளர்ந்து தனது ரவுடி சாம்ராஜ்யத்தை தமிழகத்தின் தென்மாவட்டம் வரை விரிபடுத்தினார். சிடி மணியை பிடிக்க நேரம் பார்த்து காத்திருந்த போலீசாருக்கு கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி தனது சமூக விரோத செயல்களை தொடங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னைக்கு புதிய போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றதும் முதல் நடவடிக்கையாக ரவுடிகள் ஒழிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். அதன்படி சென்னையில் தயாரிக்கப்பட்டுள்ள டாப்டென் ரவுடிகள் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டது. அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தேனாம்பேட்டை ரவுடி சிடி மணி கொலை, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு கோடிஸ்வர ரவுடியாக சொகுசு கார்களில் எந்தவித தடையும் மின்றி லாக்டவுனிலும் பந்தாவாக வலம் வருவது காவல் ஆணையரின் பார்வைக்கு சென்றது.
இதனால், அவரை கைது செய்ய காவல் ஆணைர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை ஆயுதபதுக்கல் மற்றும் தொழிலதிபர்களை துப்பாக்கி முனையில் மிரட்டுவது போன்ற புகார்களில் சிடி மணியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது சம்பவத்தின் போது போலீசார் ஒருவரை சிடி மணி துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்ற போது சிடி மணியின் வலது கை ,காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட சிடி மணியை போலீசார் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் பாதுகாப்பில் வைத்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இதற்கிடையே சிடி மணியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குக்களில் தொடர்புடைய சிடி மணிக்கு எதிரிகள் அதிகம். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அவர் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சியும் நடந்தது.
இதனால் உயிர்பயத்தில் இருந்துவந்த சிடி மணி தன்னை பாதுகாத்துக்கொள்ள பல கோடிகளை செலவு செய்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் உள்ள தனது சொகுசு பங்களா முழுவதும் சிசிடிவி கேமிராவை பொறுத்தி அதை தனது மொபைல் போனுடன் இணைத்து யார் யார் தனது வீட்டை நோட்டம் விடுகிறார்கள் என்று கண்காணித்துவந்துள்ளார்.
அத்துடன் பல சொகுசு கார்களை வாங்கியவர் சாலையில் செல்லும் போது தனக்கு முன்னும் பின்னும் Z பிளஸ் லெவலில் துப்பாக்கி ஏந்திய கூட்டாளிகளுடன் வலம் வந்துள்ளார். இதற்கெல்லாம் உட்சபட்சமாக பத்துக்கோடி ரூபாய் செலவில் தனது சொகுசு காரை புல்லட் புரூப் காராக மாற்ற டெல்லியை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மணிக்கு கொலை, கொள்ளை மூலம் குறைந்த வருமானமே கிடைப்பதால் தனது உல்லாச வாழ்க்கைக்கு ஏற்றவாரு சம்பாதிக்க துப்பாக்கி உள்ளிட்ட தயாரிப்பிலும் ஈடுப்பட்டதாக தெரிகின்றது. இதற்காக மதுரையில் ஒதுக்குப்புறமாக பல ஏக்கர் தென்னைதோப்பை வாங்கியுள்ள சிடி மணி அங்கு மறைமுகமாக பல சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டதோடு, தனது தென்னை தோப்பில் தனது கூட்டாளிகளுடன் துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளித்து வந்துள்ளான் சிடி மணி. சிடி மணி வைத்திருந்த 11 குண்டுகள் அடங்கிய கைத்துப்பாக்கியில் 3 குண்டுகளை சுட்டால் சத்தம் மட்டுமே வரும் வகையில் டம்மி குண்டுகளாக இருந்துள்ளன.
அதுகுறித்து காவல் துறையினர் கேள்வி எழுப்பியபோது, மிரட்டி பணம் பறிக்கவும், காவல் துறையினரிடம் பிடிபட்டால் தப்பிக்கவும் அந்த குண்டுகளை பயன்படுத்தி வந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சிடி மணியின் குண்டு துளைக்காத கார் டெல்லியில் எங்குள்ளது என்ற விசாரணையை தொடங்கியுள்ள காவல் துறையினர், அதை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேபோல மதுரையில் உள்ள சிடி மணியின் கூட்டாளிகளை பிடித்த விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.