தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தி அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் வழக்கமான பரிசோதனைக்காகவே ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்றும், மருத்துவர்கள் சில சோதனைகள் எடுக்க வேண்டும் என்பதால் மாலை வரை மருத்துவமனையிலேயே இருக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.