தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
சத்தியம் டிவி உதவி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சத்தியம் டிவி அலுவலகம் மூடப்பட்டது. இந்த அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அலுவலகத்தை தூய்மைப்படுத்தும் பணியிலும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சத்தியம் டிவி அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், மேலும் 26 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நேற்று முதல் தினசரி 50 பேர் என அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.