தமிழகம்

அக்.26க்குள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்- வீட்டு உரிமையாளர்களுக்கு காவல்துறை அதிரடி உத்தரவு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26-ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் வீட்டு ஓனர்களுக்கு.. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு |  chennai Police Commissioner shankar jiwal important order to house owners -  Tamil Oneindia

பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில்,

வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது.

ALSO READ  ரெட் அலர்ட் வாபஸ் - வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், சென்னையில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26ஆம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் பெயர், புகைப்படம், அவர்களின் சொந்த முகவரி, இதற்கு முன்பு தங்கி இருந்த முகவரி போன்ற விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் பூர்த்தி செய்து, அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் அளிக்க வேண்டும்.

ALSO READ  ஜெர்மனி பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி புகார்: ஆஜரானார் ஆர்யா…!

வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரிவிக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

naveen santhakumar

தேவர் ஜெயந்தி – தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை – ஆப்சென்டான ஓபிஎஸ், இபிஎஸ்?

naveen santhakumar

தேனியில் தனிமைப்படுத்தப்பட்டார் இயக்குனர் பாரதிராஜா…

naveen santhakumar