உலக அளவில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக ஐ . டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற உத்தவிட்டிருந்தது.
கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பெரும்பாலான ஐ . டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு தேவையான டேபிள், சேர் இன்னும் பல உபகரணங்களை வழங்கியது.
ஐ . டி நிறுவனங்கள் வழங்கிய பொருட்கள் மூலம் 90 சதவீதம் ஊழியர்கள் நகரங்களில் தங்கி இருந்த வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கே சென்று பணிபுரிந்து வருகின்றனர். .
தற்போது கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. பணியாளர்களும் பெரும்பாலும் வேக்சின் போட்டுக் கொண்டு வருகின்றனர்.
தற்போது நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் திறக்க அரசு அனுமதி அளித்து வருகிறது.
இதனால் ஐ . டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை திரும்ப அழைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.